Monday, February 21, 2011

எழுத்தாணிப்பால் வித்தியாரம்பம்

விஜயதசமியன்று தங்கள் காணி கொங்கப்புலவனாரிடம் குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்வது கொங்க வெள்ளாள கவுண்டர்களின் பாரம்பரிய மரபு. கல்விகற்றலின் துவக்கம் வித்யாரமப்ம். சரஸ்வதி தேவியின் பூரண அருள்பெற்ற, வாக்குப்பலிதம் உள்ள  கொங்கப்புலவனார்கள் மூலம் வித்யாரம்பம் செய்வதால் அறிவுக்கண் துலங்கும். கொங்கப் பசுவின் பாலில் (தம்ளரில்) எழுத்தாணி கொண்டு ஓம் அல்லது 'அ' எழுதி அதை குழந்தைக்கு குடிக்கக் கொடுப்பார்கள். இதை எழுத்தாணி பால் கொடுப்பது என்பார்கள். உயிரின் இயக்கத்துக்கு தாய்ப்பால் எப்படியோ அதுபோல ஞானசக்தி எழுத்தாணிப்பால் மூலம் வளம்பெறும். 

2022 மல்லசமுத்திரம் செல்லாண்டியம்மன் கோயிலில் வெளியன் குல மல்லை நாட்டுப் புலவருடன் விஜயதசமி எழுத்தாணிப்பால் வித்தியாரம்பத்தில் மல்லை நாட்டுக்குலகுருவான அய்யம்பாளையம் மடாதிபதி



மல்லசமுத்திரம் நாட்டு புலவர் எழுத்தாணிப்பால் வித்தியாரம்பம் கீழே






2023 பத்திரிக்கை:



வெள்ளோடு ராசா கோயிலில் நடந்த வித்யாரம்பம் சடங்கின் படங்கள் கீழே.







Sunday, February 20, 2011

புலவனார் வாழ்த்து

கொங்க வெள்ளாள கவுண்டர்கள் கலியாணத்தில் கொங்கப்புலவனார்களால் பாடப்படும் புலவனார் வாழ்த்து எனப்படும் கம்பர் வாழி. (இது புலவர் ராசு அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுத்த பக்கங்கள்.