Tuesday, March 22, 2011

1. பூந்துறை நாட்டுப் புலவனார்கள்:

பூந்துறை நாட்டுப் புலவனார்கள்:

A. மேல்கரை பூந்துறை நாட்டுப் புலவர்கள்: 
1. பூந்துறை நாட்டுப்புலவர்கள்:
பூந்துறைப் புலவனார்கள் சின்னையகவுண்டன்வலசில் உள்ளனர். பூந்துறை சாகாடை கோத்திரத்தார் என்ற புலவனார் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். வாரிசு தாமோதரப் புலவனார். 

தாமோதரப்புலவனார்
கொங்கதேச சேரகுல உபாத்திப் புலவனார்களின் பெரியவீட்டுக்காரர். 
செல்: 9994992126

2. வெள்ளோடு நாட்டுப்புலவனார்கள்:
கொங்கு புலவர் பட்டயம் இவ்வாறு கூறுகிறது: "பூந்துறை நாடு, காங்கய நாடு, குறுப்பு நாடு யிந்த மூன்று நாட்டுக்கும்" போக்கங்கூட்டம் எனும் புலவர் கோத்திரத்துள் நஞ்சராயப் புலவனார் என்கிறது.
பூந்துறைநாட்டில் பல ஊர்கள் புலவனார்கள் பெயரில் இருப்பினும், இரண்டு ஊர்களே முதன்மையானவை. அவை பூந்துறை சின்னையகவுண்டன் வலசு மற்றும் வெள்ளோடு புலவன்பாளையம் ஆகியன. இது மட்டுமல்லாது புலவனூரென்று ஈங்கூரருகில் ஒர் ஊரும் உள்ளது.
பூந்துறைநாட்டுப்புலவர்கள் முதலில் வடகரை நாட்டில் (பாவானிதாலுகா ஜம்பை) வாழ்ந்து வந்தனர். பின்னர் வெள்ளாளர்களால் சத்தியம் செய்து அழைத்து வந்து ஊர்கள் அளித்து பேணிக் காப்பாற்றப்பட்டனர். 
அவ்வம்சத்தில் வெள்ளோடு புலவன்பாளையப்புலவர்கள் இன்றும் வெள்ளோட்டில் வாழ்ந்து வருகின்றனர். வெள்ளோட்டு வாலசுப்புப்புலவனார் ஒருமுறை தெற்கத்திப்புலவரொருவருடன் வாதில் தோற்க, அவரை விஜயமங்கலம் தமிழ் சங்கப்புலவனாரான சாமிநாதப்புலவர் தெற்கத்திப்புலவரை வாதில் வென்று காப்பாற்றினார் என்பது இலக்கியச் செய்தி. இவ்வாறு சங்ககால முறை இன்று வரை கொங்கரால் பேணப்பட்டுவந்துள்ளது.  



சின்னுசாமி புலவனார் (இரத்தினாசலப் புலவனார் மகன், சாமிநாதப்புலவர்  பேரன்)
வெள்ளோட்டில் இன்றைய புலவனார் வாரிசு. இவர் ஓலப்பாளையத்தில் வசித்து வருகிறார். செல்: 9750552030

வெள்ளோடு தென்முகம் புலவர்கள்:

புலவர்கள் பூசை செய்யும் வெள்ளோடு ராசா கோயிலில் நடந்த வித்யாரம்பம் 


4. எழுமாத்தூர் நாட்டுப்புலவனார்கள்:
எழுமாத்தூர் அவலூர் புலவனார்கள் சென்னிமலை புலவனார் மகன்கள் ராம புலவனார், லட்சுமணப் புலவனார் ஆகியோர் கடைசியில் மொடக்குறிச்சி மஞ்சக்காட்டுவலசில் குடியிருந்தனர். மொடக்குறிச்சி ஹை ஸ்கூல் வாத்தியாராக இருந்தனர்.  

புலவனூர் புலவனார்கள்:
ஈங்கூர் அருகே புலவனூரில் புலவனார்கள் வசித்து வருகின்றனர். ஈஞ்ச கோத்திரத்தாரது ஆஸ்தான புலவனார்கள். இன்னும் தம்பிராட்டி அம்மனுக்கு ஊஞ்சல் பாட்டு பாடி வருகின்றனர்.

சென்னப்பநாயக்கம்பாளையம் புலவனார்:
மொடக்குறிச்சி அருகே சென்னப்பநாயக்கன்பாளையத்தில் ஒரே ஒரு குடும்பத்தினர் உள்ளனர்.

பெருந்துறைப் புலவனார்கள்:
பெருந்துறை அருகே நாற்பது குடும்பங்கள் உள்ளன

B. கீழக்கரை பூந்துறை நாடு (எழுகரை நாடு) புலவர்கள்:
1a . மோரூர் நாட்டுப்புலவர்கள் - ஆகவராம பட்டன்:
கருவேப்பம்பட்டியிலிருந்து தற்பொழுது தர்மபுரி நாய்க்கன்கொட்டாய் சென்று வாழ்கின்றனர். 
ஆனந்தன் புலவர்,
பழனிவேல் புலவர் தம்பி மகன்,
(தற்போது: கவுண்டம்பாளையம், மோரூர்)

1b . மொளசி நாட்டுப்புலவர்கள் - அன்னத்தியாக பட்டன்:
 சோழசிராமணியில் அங்காளம்மன் கோயில் எதிரில் உள்ளனர்.
                காசிவாசி அங்கமுத்து கூத்தாடிப்புலவர்   

தற்போதைய  கூத்தாடிப்புலவர் மரியாதை அளிக்கும் மொளசி நாட்டுக்கவுண்டர்  பழனிவேல்   


புலவருக்குப் பாரம்பரிய சங்ககால கொங்க முறைப்படி பால்பழம் வழங்கல் 



நாட்டு வாழிபாடல் பாடி வாழ்த்தும் அன்னதியாக பட்டன்

செல்: 7373325731

2A . பருத்திப்பள்ளி நாட்டுப்புலவர்கள்  - முதலிக்காமிண்ட பட்டன்:
வண்டிநத்தத்தில் இருந்தவர். தற்பொழுது:
குமாரசாமிப் புலவர்,
இளந்தோப்பு,
நெய்க்காரப்பட்டி,
சேலம்
என்ற விலாசத்தில் இருக்கிறார்கள். போன்: 8675979898
2a. மல்லசமுத்திர நாட்டுப்புலவர்கள்:
நாச்சிப்பட்டியில் உள்ளனர். போன்:  8870780109


நாட்டுக்கவுண்டர் குழந்தைக்கு எழுத்தாணிப்பால் (வித்தியாரம்பம்) செய்து வைக்கும் சபாபதி புலவர்  
போன்:  8870780109

3A. ஏழூர் நாட்டுப்புலவர்கள்: 
 கருமகவுண்டன்பட்டியிலிருந்து  தற்பொழுது சேலத்தில் உள்ளனர். பழனிப் புலவர் என்று பெயர். போன்: 
3a.  கலியாணி நாட்டுப்புலவர்கள்:

No comments:

Post a Comment